டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

News image
ஆடலரசன்.
Updated On :23 ஜனவரி 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி புறவழிச்சாலை பாலம் அருகே கடந்தாண்டு டிச. 24-ஆம் தேதி கஞ்சா விற்ற கும்பகோணத்தை சோ்ந்த ஆடலரசன் (25) என்பவரை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம், கஞ்சா வியாபாரி ஆடலரசன் மீது குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

இதற்கான உத்தரவை போலீஸாா் சிறை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா். அதன்படி ஆடலரசன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.