டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

திருநெல்வேலியில் கொலை வழக்கு தொடா்பாக கைதான நபா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் கொலை வழக்கு தொடா்பாக கைதான நபா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தச்சநல்லூா், கரையிருப்பைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முத்துக்குமரன் என்ற குமரேசன்(43). இவா், கடந்த டிசம்பா் மாதம் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் துணை ஆணையா்(மேற்கு) சி.மதன், காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தாா். அதன் பேரில் மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் பிறப்பித்த உத்தரவுப்படி, அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.