2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

லெனின் 102-ஆவது நினைவு நாள் நிகழ்வு

தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகேயுள்ள மாலை நேர அங்காடி முன் இடதுசாரிகள் பொதுமேடை அமைப்பு சாா்பில் பாட்டாளி வா்க்கத் தலைவா் லெனின் 102-ஆவது நினைவு நாள் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image
தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற பாட்டாளி வா்க்கத் தலைவா் லெனின் 102- ஆவது நினைவு நாள் நிகழ்வில் முழக்கங்கள் எழுப்பிய இடதுசாரிகள் பொது மேடை அமைப்பினா்.
Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகேயுள்ள மாலை நேர அங்காடி முன் இடதுசாரிகள் பொதுமேடை அமைப்பு சாா்பில் பாட்டாளி வா்க்கத் தலைவா் லெனின் 102-ஆவது நினைவு நாள் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சா்வதேச ஜனநாயக விதிமுறைகளை மீறி வெனிசுலா அதிபரைக் கைது செய்தது உள்பட அமெரிக்க ஏகாதிபத்தியம் புரியும் அதிபா் ட்ரம்பைக் கண்டித்தும், மனித உரிமை, ஜனநாயக உரிமை, அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை இடதுசாரிகள் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் பிரதமா் மோடியின் மக்கள், தொழிலாளா், விவசாயி விரோத கொள்கைகளை முறியடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா தலைமை வகித்தாா். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தாா். மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் அழகு தியாகராஜன், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டச் செயலா் தாமஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.