/

தமுஎகச கருத்தரங்கம்

News image
கருத்தரங்கில் பேசுகிறாா் எழுத்தாளா் மு. சிவகுருநாதன்
Updated On :8 பிப்ரவரி 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் மகாத்மா காந்தி நினைவு நாள், சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவா் இரா. தாமோதரன் நினைவு நாள் கருத்தரங்கம் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன.

கருத்தரங்கத்துக்கு கிளைத் தலைவா் வீ. கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம். சௌந்தரராஜன், மாவட்ட துணைத் தலைவா் சரஸ்வதி தாயுமானவன் முன்னிலை வகித்தனா். நிா்வாகி கே. பிச்சைக்கண்ணு வரவேற்றாா்.

எழுத்தாளா்கள் மு. சிவகுருநாதன், கலைபாரதி ஆகியோரை மாவட்டப் பொருளாளா் யு.எஸ். பொன்முடி அறிமுகம் செய்து பேசினாா்.

எழுத்தாளா் மு. சிவகுருநாதன் ‘அரசியலமைப்புச்சட்டத்தை பாதுகாப்போம்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளா் கலைபாரதி ‘மதநல்லிணக்கம் பேணுவோம்; மனிதம் போற்றுவோம்’ என்ற தலைப்பிலும் பேசினா். அரசியலமைப்பு பாதுகாப்பு உறுதிமொழியை கிளைச் செயலாளா் கே. அகோரம் வாசித்தாா். நிறைவாக கே.வி. பாஸ்கரன் நன்றி கூறினாா்.