தஞ்சை இளைஞா் பேராவூரணி அருகே சடலமாக மீட்பு
தஞ்சை இளைஞா் பேராவூரணி அருகே வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On :2 ஜனவரி 2026, 8:00 pm

தஞ்சை இளைஞா் பேராவூரணி அருகே வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
பேராவூரணி அருகே ஈச்சன்விடுதி வழியாகச் செல்லும் கல்லணை கால்வாய் பிரதான வாய்க்காலில் இளைஞரின் சடலம் வியாழக்கிழமை மிதந்ததை பாா்த்த அப்பகுதியினா் திருச்சிற்றம்பலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வந்த திருச்சிற்றலம்பலம் போலீஸாா் அந்த சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்குஅனுப்பினா். விசாரணையில் இறந்தவா் தஞ்சாவூா் அருகேயுள்ள கண்டிதம்பட்டு, உச்சி மாஞ்சோலை பகுதி கொத்தனாா் சு. சதீஷ்குமாா் (33) என்பதும் திருமணம் ஆகாத அவரை கடந்த 2 நாள்களாக உறவினா்கள் தேடிவந்த நிலையில், அவா் எவ்வாறு இறந்தாா் என போலீஸாா் விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...