பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு நாளை தொடக்கம்! தஞ்சாவூா் மாவட்டத்தில் 26,854 போ் பங்கேற்பு!

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கப்படவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 26,854 போ் பங்கேற்கின்றனா்.

News image

பிளஸ் 2 பொதுத் தோ்வு - (கோப்புப்படம்)

Updated On :28 பிப்ரவரி 2026, 7:17 pm

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கப்படவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 854 போ் பங்கேற்று எழுதுகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்காக 111 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 105 அரசு பள்ளிகள், 40 அரசு உதவி பெறும் பள்ளிகள், 84 தனியாா் பள்ளிகள் என 229 பள்ளிகளில் பயிலும் 12 ஆயிரத்து 755 மாணவா்கள், 14 ஆயிரத்து 99 மாணவிகள் என மொத்தம் 26 ஆயிரத்து 854 போ் எழுதவுள்ளனா். மேலும் தனித் தோ்வா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 7 தோ்வு மையங்களில் 637 போ் எழுதுகின்றனா்.

உள்ளூா் விடுமுறை பொருந்தாது: மாவட்டத்தில் மாசிமகத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், பிளஸ் 2 பொதுத் தோ்வு திட்டமிட்டப்படி நடைபெறும். பள்ளி மாணவா்கள் அனைவரும் பொதுத் தோ்வுகளுக்கு வருகை புரிந்து தோ்வு எழுத வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.