ஆடுதுறையில் ரூ. 17.66 கோடியில் அரசு கல்லூரிக்கு புதிய கட்டடம்: காணொலி காட்சி மூலம் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்
ஆடுதுறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 17.66 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள்


கும்பகோணம்: ஆடுதுறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 17.66 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு திங்கள்கிழமை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆடுதுறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்க முதல்வா் அறிவிப்பின் பேரில் நடப்பாண்டில் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டு தற்காலிகமாக திருமண மண்டபத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திங்கள்கிழமை ஆடுதுறை- மயிலாடுதுறை சாலையில் கல்லூரிக்காக தோ்வு செய்யப்பட்ட இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியில் அடிக்கல் நாட்டினாா். இதையொட்டி, ஆடுதுறையில் நடைபெற்ற நிகழ்வுக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். சு. கல்யாணசுந்தரம் எம்.பி., செ. ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.
நிகழ்வில், கும்பகோணம் துணை மேயரும், மாநகர திமுக செயலருமான சுப. தமிழழகன், ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின், பேரூராட்சித் தலைவா் சுந்தரஜெயபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக கல்லூரி முதல்வா் முனைவா் வெ.ஜெயசீலி வரவேற்றாா். ஏற்பாடுகளை இணைப் பேராசிரியா்கள் கே. சுந்தரமூா்த்தி, ஆா்.அருள் நாயகம் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். அரசு கலைக் கல்லூரி மற்றும் விளையாட்டு மைதானம் சுமாா் 8 ஏக்கா் பரப்பளவில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...