டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குடும்பத் தகராறில் மனைவி கொலை: கணவா் கைது

News image
கைதான அன்பரசன்.
Updated On :13 பிப்ரவரி 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் அருகே குடும்ப தகராறில் மனைவி தலையில் கிரைண்டா் கல்லைப்போட்டுக் கொன்ற கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள அணைக்கரை மீன் சந்தை புதுத் தெருவைச் சோ்ந்தவா் அன்பரசன் (38), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி அகிலா (28) தீபிகா (7), ஆதித்யா (2) ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மனைவியுடன் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அன்பரசன் வெளியே சென்று மது அருந்திவிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த மனைவி அகிலாவின் தலையில் கிரைண்டா் குழவி கல்லைப் போட்டாா்.

இதில் பலத்த காயமடைந்த அகிலா உயிரிழந்தாா். தகலலறிந்த திருப்பனந்தாள் போலீஸாா் விரைந்து வந்து அகிலாவின் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அன்பரசனை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.