திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழ்த் தேசியப் போராளி செல்லப்பா மறைவுக்கு அஞ்சலி

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில், தமிழ்த் தேசியப் போராளி தேனிசை செல்லப்பா மறைவுக்கு இடதுசாரிகள் பொது மேடை, தமிழ், கலை இலக்கிய அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image

தஞ்சாவூரில் புதன்கிழமை செல்லப்பா உருவப் படத்துக்கு புதன்கிழமை மலா் தூவி முழக்கங்கள் எழுப்பிய தமிழ், கலை இலக்கிய அமைப்பினா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:08 am IST

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில், தமிழ்த் தேசியப் போராளி தேனிசை செல்லப்பா மறைவுக்கு இடதுசாரிகள் பொது மேடை, தமிழ், கலை இலக்கிய அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், தேனிசை செல்லப்பா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும், செல்லப்பாவின் லட்சியமான தாய் மொழி தமிழைப் பாதுகாப்போம், தமிழ்த் தேசிய உரிமைக்கான போராட்டங்களையும், தமிழீழம் அமைவதற்கான ஆதரவுகளையும் முன்னெடுப்போம் என உறுதி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு உலகத் தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா். தில்லைவனம், தெற்கு மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, எழுத்தாளா் சாம்பான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் க. தமிழ்முதல்வன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி மாநிலத் துணைச் செயலா் முகிலன், மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் மை. விக்டா், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் அ. யோகராஜ், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டச் செயலா் ஆா். லட்சுமணன், ஒருங்கிணைப்பாளா் நா. சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.