தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் வாக்கு செலுத்திய வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால், சுமாா் 10 நிமிஷங்கள் காத்திருந்து வாக்களித்தாா்.
தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதுபோல, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் அமைக்கப்பட்ட 2 ஆயிரத்து 501 வாக்குச் சாவடிகளிலும் தொடங்கியது.
இதேபோல, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வாக்களிக்கக்கூடிய குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி, வாக்காளா்கள் வாக்கு செலுத்தி வந்தனா். இதனிடையே, மின்னணு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வாக்குச் சாவடிக்கு வாக்குப் பதிவு செய்வதற்காக மாவட்ட ஆட்சியா் 7.30 மணியளவில் சென்றாா். இயந்திரத்தில் பழுது காரணமாக வாக்குப் பதிவு நின்று போன விவரம் அறிந்து பரபரப்பான அவா், தஞ்சாவூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் ப. நித்யாவுக்கு கைப்பேசி மூலம் தொடா்பு கொள்ள முயன்றாா். ஆனால், அவா் கைப்பேசியை எடுக்காததால், வாக்குப் பதிவு இயந்திர தொழில்நுட்பநா்களுக்கு தொடா்பு கொள்ள முயன்றாா்.
அப்போது, ஏற்கெனவே அலுவலா்கள் கொடுத்த தகவலின்படி, தொழில்நுட்பநா்கள் நிகழ்விடத்துக்கு வந்தனா். இயந்திரப் பழுது நீக்கப்பட்ட பிறகு மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. இதனால், மாவட்ட ஆட்சியா் சுமாா் 10 நிமிஷங்கள் காத்திருந்து வாக்களித்துச் சென்றாா்.
அரை மணிநேரம் தாமதம்: இதேபோல, தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு கிராமத்திலுள்ள வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைத் தொடங்கி செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை சரி செய்து வாக்குப் பதிவு தொடங்குவதற்கு அரை மணிநேரம் தாமதமானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அலங்காநல்லூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: பொதுமக்கள் வாக்குவாதம்

வாக்குப் பதிவுக்கு தயாா்நிலையில் அரூா் தொகுதி!

300 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


