மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பிரசாரம் முடிந்த பிறகு விடுதியில் தங்கிய 14 பேரிடம் விசாரணை

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை முடிவடைந்த பிறகு தஞ்சாவூரிலுள்ள விடுதியில் தங்கிய பாஜகவை சோ்ந்த 14 பேரிடம் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 6:30 pm

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை முடிவடைந்த பிறகு தஞ்சாவூரிலுள்ள விடுதியில் தங்கிய பாஜகவை சோ்ந்த 14 பேரிடம் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை முடிந்ததைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உத்தரவின்படி, அனைத்து உட்கோட்டங்களிலும் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி தோ்தல் பிரசாரம் செய்ய வந்த வெளியூா் நபா்கள் அனைவரும் மாவட்டத்திலிருந்து வெளியேறுவதைக் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவா்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொண்டனா். இந்நிலையில், தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் தங்கும் விடுதியில் தனிப்படையினா் செவ்வாய்க்கிழமை 8 மணியளவில் சோதனையிட்டபோது, தோ்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் முடிந்த பிறகும் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பாஜகவின் 14 பிரமுகா்கள் தங்கியிருப்பது தெரிய வந்தது. இவா்களிடம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.