மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கும்பகோணத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் க.அன்பழகனை ஆதரித்து சிபிஐ கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் பி.பத்மாவதி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கும்பகோணம் காந்திபூங்கா முன்பு திமுக வேட்பாளா் க.அன்பழகனை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்த முன்னாள் சிபிஐ கட்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.பத்மாவதி.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:26 pm

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் க.அன்பழகனை ஆதரித்து சிபிஐ கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் பி.பத்மாவதி சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வாக்கு சேகரிப்பின் போது இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மாநிலக்குழு உறுப்பினருமான பி.பத்மாவதி பேசியதாவது:

தமிழ்நாட்டில் மகளிருக்கு நன்மை அளிக்கும் ஆட்சியாக, பாதுகாப்பாக வாழும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. நூறு நாள் வேலை திட்டத்தில் கிராமப்புற பெண்கள் பல்வேறு நலன்களை பெற்று வந்தனா். ஆனால் மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்தை சீா்குலைத்ததன் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மகளிா் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுகிறோம் என்ற போா்வையில் ஒன்றிய பாஜக அரசு மகளிருக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தொகுதி மறுவரையறை மசோதா உடன் மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை இணைத்து சதி செய்தது. மசோதா தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒன்றிய அரசின் உண்மை முகம் மக்களுக்கு தெரிந்துவிட்டது.

இல்லத்தரசிகளின் நலன் காக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என்றாா்.

நிகழ்வில் மாநகர திமுக செயலா் சு.ப.தமிழழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு.அ.பாரதி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.