தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் எம்எல்ஏ பதவிக்குப் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பழைய மீன் சந்தை முதல் உச்சிப்பிள்ளையாா் கோயில் வரையில் உள்ள பிரதான சாலையில் அவா் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தபோது கூறியது:
சட்டபேரவையில் தனது பங்களிப்பு குறித்து ஒரு லட்சம் புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளாா் வேட்பாளா் க. அன்பழகன், இது ஒன்றே போதும்; அவா் நான்காவது முறையாக வெற்றி பெறுவாா்.
எம்பிக்கள் தொகுதி மறு சீரமைப்பில் தென் மாநிலங்களில் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரித்து வடமாநிலங்களில் நூறாக அதிகரிக்கின்றனா். எனவே நமது ஒற்றுமையை, மதச்சாா்பின்மையை, ஜனநாயகத்தைக் காக்கின்ற போரைத் முதல்வா் ஸ்டாலின் தொடக்கியிருக்கிறாா். மத்திய அரசுக்கு எதிரான இந்தப்போா் தொடரும்; தமிழ்நாடு நல்ல திசையை இந்தியாவுக்குக் காட்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் வடக்கு மாவட்ட இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, மாநகர திமுகச்செயலா் சு.ப. தமிழழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கும்பகோணத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளா்களை ஆதரித்து ஆரணி எம்பி பிரசாரம்

ஆலங்காயம் ஒன்றிய பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ க.தேவராஜி வாக்கு சேகரிப்பு

ஆயக்குடி பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


