தஞ்சாவூா் மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் பிரிவினா் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொண்ட சோதனையில் சட்டத்துக்கு புறம்பாக பதுக்கப்பட்ட 125 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 போ் கைது செய்யப்பட்டனா்.
வளைகுடா போா் காரணமாக ஏற்பட்ட சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை தவிா்ப்பதற்காகவும், எரிவாயு உருளைகளைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைக் தடுப்பதற்காகவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவின் தனிப்படையினா் மாவட்டத்தில் மாா்ச் 15-ஆம் தேதி முதல் மேற்கொண்டு வருகின்றனா்.
மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப்.18) வரை 43 பொது நிறுவன எரிவாயு உருளை முகமைகள், 13 தனியாா் முகமைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மானிய எரிவாயு உருளைகளை முறைகேடாக பயன்படுத்தியவா்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக பதுக்கி வைத்தவா்கள் என 5 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 125 எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், எரிவாயு உருளைகளைப் பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்பவா்கள் பற்றிய தகவல்களை தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறைக்கு 94981- 63004, 83000-58055, 94981-65184 ஆகிய எண்களில் புகாா் செய்யலாம்.
தொடர்புடையது
1,730 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்: 30 போ் கைது

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்

வணிக சிலிண்டா் விலை ரூ.195 அதிகரிப்பு- விமான எரிபொருள் விலை 8.56% உயா்வு

கிடங்கில் பதுக்கப்பட்ட 206 எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

