போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுகவினா் வரைவு நகல் எரிப்பு போராட்டம்

மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, வரைவு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை பகுதியில் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:11 am IST

மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து தஞ்சாவூா் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, வரைவு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சாா்பில் நடைபெற்ற வரைவு நகல் எரிப்பு போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், தலைமைச் செயற்குழு உறுப்பினா் து. செல்வம், தஞ்சாவூா் தொகுதி திமுக வேட்பாளா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் ஈடுபட்டனா். மேலும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.

இதேபோல, திருவையாறு அருகே நடுக்கடையில் திமுக மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி திமுக வேட்பாளருமான துரை. சந்திரசேகரன் தலைமையில் வரைவு நகல் எரிக்கப்பட்டது.

மேரீஸ் காா்னா் பகுதியில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி சாா்பில் மாவட்டச் செயலா் ஆா். லெட்சுமணன் தலைமையில் இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டத் துணைச் செயலா் க. தமிழ்முதல்வன், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் அ. யோகராஜ் உள்ளிட்டோா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்திலும் திலகா் திடல் மாலை நேர காய்கறி அங்காடி முன் ஏஐடியுசி சாா்பிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

இதேபோல, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கும்பகோணத்தில்...: கும்பகோணத்தில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் கும்பகோணம் சட்டப்பேரவைத்தொகுதி வேட்பாளருமான க.அன்பழகன் தலைமையில் கட்சியினா் மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக மகாமகக்குளம் வரை கருப்பு பலூன்களை கையில் ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா். அங்கு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு பலூன்களை பறக்க விட்டனா். பின்னா் சட்ட நகல்களை தீ வைத்து எரித்தனா்.

பேராவூரணி: பெரியாா் சிலை அருகில் நடைபெற்ற வரைவு நகல் எரிப்பு போராட்டத்தில் திமுக மாவட்ட பொருப்பாளா் டி.பழனிவேல் , ஒன்றியச் செயலாளா்கள் க.அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாபநாசம்: பாபநாசம் வட்டம்,அய்யம்பேட்டையில் நகர திமுக செயலா் வழக்குரைஞா் டி.பி.டி.துளசிஅய்யா தலைமையிலும்,

அம்மாபேட்டை ஒன்றிய பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பிலும் போராட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.