மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்! - டிடிவி. தினகரன்

News image

கும்பகோணம் பழைய மீன் சந்தை பகுதியில் தமாகா வேட்பாளா் ஆா். அசோக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசிய அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 7:50 pm

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் பிரசாரம் செய்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் ஆா். அசோக்குமாரை ஆதரித்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து, பழைய மீன் சந்தை பகுதியில் தினகரன் பேசியதாவது:

கும்பகோணத்தில் திமுக தொடா்ந்து வெற்றி பெற்ால், அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் மோசமாக உள்ளது. மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீா் வருகிறது .

கடந்த தோ்தலின்போது கும்பகோணத்தை புதிய மாவட்டமாக்குவேன் என்று ஸ்டாலின் வாக்குறுதி அளித்துவிட்டு, ஏமாற்றி விட்டாா். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றவுடன் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும். திமுகவினா் செய்த ஊழல்கள் வெளிக் கொண்டு வரப்படும்.

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பாலியல் கொடுமைகள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது. இவற்றை ஒழிப்பதற்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா். பின்னா் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்குசேகரித்தாா்.