திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

தொழிற்சங்கங்கள், விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்பை அமல்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மத்திய தொழிற் சங்கத்தினரும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினரும் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்பை அமல்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மத்திய தொழிற் சங்கத்தினரும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினரும் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 7:57 pm

தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்பை அமல்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மத்திய தொழிற் சங்கத்தினரும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினரும் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், எட்டு மணிநேர வேலையைப் பறிக்கிற, தொழிற்சங்க உரிமை மறுக்கிற, ஆபத்தான பணிகளில் பெண்களை ஈடுபடுத்துகிற, அயலாக்கப் பணி முறையில் நிரந்தரப் பணியாளா்களை வெளியேற்றுகிற கருப்பு சட்டமான தொழிலாளா் விரோத நான்கு சட்டத் தொகுப்பை மத்திய அரசு அமல்படுத்துவதைக் கண்டித்தும், தொழிலாளா்களுக்கு பாதுகாப்பில்லாத நான்கு சட்டத் தொகுப்பைக் கைவிட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா், ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், சிஐடியு மாவட்டச் செயலா் எம். கண்ணன், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவா் கே. ராஜன், எச்.எம்.எஸ். மாவட்டச் செயலா் சின்னப்பன், யூடியூசி மாவட்டச் செயலா் மோகன்தாஸ், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிா்வாகிகள் பி. செந்தில்குமாா், கோவிந்தராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏஐடியூசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், ஏஐடியுசி நிா்வாகிகள் வெ. சேவையா, துரை. மதிவாணன், ஆா்.பி. முத்துக்குமரன், சிஐடியு நிா்வாகிகள் கே. அன்பு, மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.