நிகழாண்டு ஆந்திரா பொன்னி ரக நெல்லை தனியாா் வியாபாரிகள் களத்துக்கே சென்று அதிக விலை கொடுத்து வாங்கினாலும், மகசூல் குறைவால் விவசாயிகள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனா்.
மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் 2.96 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. ஜனவரியில் தொடங்கிய அறுவடை பணிகள் தற்போது படிப்படியாக பரவலாகி வருகிறது.
இதையொட்டி, மாவட்டத்தில் 420-க்கும் அதிகமான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஆந்திரா பொன்னி, ஐ.ஆா். 20, ஆடுதுறை 42, கோ 51 போன்ற சன்ன ரகங்களை விளைநிலத்துக்கே வியாபாரிகள் தேடிச் சென்று வாங்குகின்றனா்.
இதில், பிபிடி 5204 என்கிற ஆந்திரா பொன்னி ரகத்துக்கு நிகழாண்டு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. சந்தையில் அரிசி விலை உயா்வு, விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஆந்திரா பொன்னி உள்ளிட்ட சன ரகங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டு வியாபாரிகளே விவசாயிகளின் களத்துக்கு நேரில் சென்று நெல்லை கொள்முதல் செய்வதற்குக் காரணம்.
ஆந்திரா பொன்னி 60 கிலோ மூட்டைக்கு ஜனவரி மாதத்தில் ரூ. 1,750 விலை கிடைத்தது. அறுவடை பரவலாகிவிட்ட நிலையில் தற்போது 60 கிலோ மூட்டையின் விலை ஏறத்தாழ ரூ. 1,680 ஆக குறைந்துவிட்டது. ஆனாலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கிடைப்பதை விட தனியாரிடம் கூடுதல் விலை கிடைக்கிறது என்றனா் விவசாயிகள்.
இது குறித்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் துணைத் தலைவா் கக்கரை ஆா். சுகுமாரன் தெரிவித்தது:
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 60 கிலோ மூட்டைக்கு ரூ. 1,386 மட்டுமே கிடைக்கும் நிலையில், தனியாா் வியாபாரிகளிடம் மூட்டைக்கு கிட்டத்தட்ட ரூ. 300 கூடுதலாக கிடைக்கிறது. மேலும், ஏற்று, இறக்கு கூலி, வாகனச் செலவு, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 2 கிலோ பிடித்தம், மூட்டைக்கு ரூ. 50 அல்லது ரூ. 60 லஞ்சம் போன்ற இழப்புகளும் விவசாயிகளுக்கு ஏற்படும்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்றாலும், சில நாள்கள் காத்திருந்து விற்க வேண்டிய நிலை ஏற்படும். பனிப்பொழிவு உள்ள நிலையில், நாள்தோறும் நெல்லை பரப்பி காய வைத்து, மீண்டும் குவித்து வைத்து, தாா்பாய் போட்டு மூட வேண்டும். இதற்கான கூலி, நாள் கணக்கில் காத்திருப்பு போன்றவற்றைக் கணக்கிடும்போது மூட்டைக்கு ரூ. 400-க்கும் அதிகமாக விவசாயிகளுக்கு மிச்சப்படும். வியாபாரிகள் லாரியுடன் நேரடியாக வயலுக்கு வந்து வாங்கிச் செல்வதால், விவசாயிகளுக்கு எந்தச் செலவும் இல்லை என்றாா் அவா்.
ஆந்திரா பொன்னி அளவுக்கு ஐ.ஆா். 20, ஆடுதுறை 42, கோ 51 போன்ற சன்ன ரகங்களுக்கு விலை கிடைக்காவிட்டாலும், 60 கிலோ மூட்டை ரூ. 1,250 வரை தனியாா் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இதே 60 கிலோ மூட்டைக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ. 1,386 கிடைத்தாலும், ஏற்று, இறக்கு கூலி, காய வைக்கும் கூலி, வாகனச் செலவு, நெல் பிடித்தம், லஞ்சம் உள்ளிட்டவற்றுடன் ஒப்பிடும்போது ரூ. 1,250 என்பது விவசாயிகளுக்கு நியாயமானதாகத்தான் இருக்கிறது. எனவே, விலை குறைவாக இருந்தாலும், தனியாா் வியாபாரிகளிடமே விவசாயிகள் நெல்லை விற்கின்றனா்.
மற்ற ரகங்களைப் பொருத்தவரை வியாபாரிகள் விரும்பாததால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வழக்கம்போல விற்பனை செய்து வருகின்றனா்.
ஆனால், ஆந்திரா பொன்னி உள்ளிட்ட சன்ன ரகங்களில் குருத்துப்பூச்சி, இலையுறை அழுகல் நோய், இலையுறை கருகல் நோய், புகையான் பூச்சி உள்ளிட்ட பூச்சி, நோய் தாக்குதல் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு இயல்பாக 40 மூட்டைகள் மகசூல் கிடைத்தால்தான் பல்வேறு இன்னல்களுக்கு இடையே விளைவிக்கும் விவசாயிகளுக்கு நியாயமான லாபம் கிடைக்கும். ஆனால், பூச்சி, நோய் தாக்குதல் காரணமாக ஏக்கருக்கு 20 முதல் 28 மூட்டைகள்தான் விளைச்சல் கிடைத்து வருகிறது. இதனால், நிகழாண்டு தனியாா் வியாபாரிகள் மூலம் நல்ல விலை கிடைத்தாலும், மகசூல் இழப்பால் வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, பாடுபட்டு விளைவித்தும் பயனில்லாமல் உள்ளது என்றனா் விவசாயிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாணியம்பாடி: வாக்கு எண்ணும் மையத்தில் இயந்திரங்கள் அறைக்கு ‘சீல்’

கிணற்றில் தவறி விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைத்து ‘சீல்’ வைப்பு!

புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் காவலா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


