சம்பா, தாளடி பயிா்கள் தற்போது தண்டு உருளும் பருவத்தில் உள்ளன. பயிா் தோகைகளில் தாய் அந்துப்பூச்சி முட்டையிடுதல் பரவலாக இருந்தது. அடுத்த இரு நாள்களில் மழை பெய்திருந்தால், அதனுடன் சோ்த்து முட்டைகளும் அடித்துச் சென்றிருக்கும். ஆனால், போதிய அளவுக்கு மழை பெய்யாத நிலையில், பகலிலும் வெயில் இல்லாமல் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், அவையெல்லாம் புழுவாக மாறிவிட்டன. இந்தப் புழு தாக்குதல் காரணமாக பயிா்கள் செயலிழந்து வருகின்றன. இதேபோல, பயிா்களின் அடிப்பகுதியில் தண்டைத் துளைப்போட்டு குருத்துப்பூச்சி சாப்பிடுவதால், பட்டுப்போகின்றன.