தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50% சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை 

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

News image
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50% சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனையைத் தொடக்கி வைத்து பார்வையிடுகிறார் துணைவேந்தர் வி. திருவள்ளுவன்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:00 am

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த விற்பனையைத் தொடக்கி வைத்த துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தெரிவித்தது:

தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மட்டுமன்றி தமிழ் உலகின் தலைசிறந்த ஆய்வறிஞர்களின் படைப்புகள், பழந்தமிழ் இலக்கியங்கள், அகராதி மற்றும் களஞ்சியங்கள் எனப் பலவகை நூல்களையும் ஆழமாக ஆய்வு செய்து, அவற்றை நூலாக வெளியிடும் அரும்பணியைத் இப்பல்கலைக்கழகப் பதிப்புத் துறை மேற்கொண்டு வருகிறது. 

இப்பதிப்புத் துறையின் மூலம் இதுவரை 525 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக 12-ஆவது திட்ட நல்கை நிதியிலிருந்து 2021 ஆம் ஆண்டில் 16 புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. 2021 - 22 ஆம் ஆண்டில் 43 மறு பதிப்பு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆம் ஆண்டில் ரூ.13.57 லட்சத்துக்கு நூல்கள் விற்கப்பட்டன. நிகழாண்டு இதுவரை ரூ.2.94 லட்சம் மதிப்பில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மலிவு விலையில் அரிய நூல்களை வாங்கிப் பயன்பெறும் வகையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளின்போது 50%
சிறப்புக் கழிவு விலையில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

நிகழாண்டும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திங்கள்கிழமை முதல் மே 17-ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு 50% சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை நடைபெறுகிறது.

இதை மாணவர்கள், ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9489102276 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் துணைவேந்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.