திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

‘உம்பரான்’ சிறுகதை நூல் வெளியீடு

News image

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :11 மே 2026, 2:26 am IST

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில், எழுத்தாளா் பாண்டிச்செல்வம் எழுதிய ‘உம்பரான்’ சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் எழுத்தாளா் அண்டனூா் சுரா தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் த. அறம், திமுக இலக்கிய அணித் துணைத் தலைவா் கவிதைப்பித்தன் ஆகியோா் கலந்து கொண்டு நூலை வெளியிட்டனா்.

பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் எழுத்தாளா் அகிலா கிருஷ்ணமூா்த்தி பங்கேற்று நூல் குறித்து விமா்சன உரை நிகழ்த்தினாா்.

மாவட்டச் செயலா் பாலச்சந்திரன் தொகுத்து வழங்கினாா். நூலாசிரியா் மா. பாண்டிச்செல்வம் ஏற்புரை வழங்கினாா். முன்னதாக மாவட்டப் பொருளாளா் எழுத்தாளா் சோலச்சி வரவேற்றாா். முடிவில் ஆ. கலையரசன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.