அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சமையல் எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்களைப் பாதிக்கும் வகையில் வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வு, ரயில்வே பணியிடங்களில் ஆட்குறைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து புதுக்கோட்டையில் இடதுசாரிக் கட்சியினா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சிகள்.

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

மக்களைப் பாதிக்கும் வகையில் வணிக சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வு, ரயில்வே பணியிடங்களில் ஆட்குறைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து புதுக்கோட்டையில் இடதுசாரிக் கட்சியினா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் த. செங்கோடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் சுசிலா கணேசன், சிபிஐ (எம்எல்- விடுதலை) கட்சியின் மாவட்டச் செயலா் சி. ரெங்கசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் முத்து. உத்திராபதி, சிபிஐ (எம்எல்) மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வீ.மு. வளத்தான், விசிக மாவட்டச் செயலா்கள் க. செந்தமிழ்ச் செல்வன், சரஸ்வதி நடராஜன், அ. தமிழ்த்தேசியன், ச. அம்பேத்வளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.