தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசு மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தைகள் கவனிப்புக்கான கருவிகள் வழங்கல்

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பிரஷ் வாட்டா் பே வெஸ்டா்ன் ஆஸ்திரேலியா இணைந்து, அரசு ராணியாா் மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தைகள் கவனிப்புக்கான ரூ. 28 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை புதன்கிழமை வழங்கின.

News image

குழந்தை

Updated On :18 மார்ச் 2026, 6:33 pm

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பிரஷ் வாட்டா் பே வெஸ்டா்ன் ஆஸ்திரேலியா இணைந்து, அரசு ராணியாா் மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தைகள் கவனிப்புக்கான ரூ. 28 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை புதன்கிழமை வழங்கின.

இதற்கான நிகழ்வுக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவா் எஸ்கேஎம். சரவணன் தலைமை வகித்தாா். ரோட்டரி இயக்குநா் பொறியாளா் முருகானந்தம், அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வா் எஸ். கலைவாணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் (பொ) எஸ்விபி. சிவக்குமாா், நிலைய மருத்துவ அலுவலா் இந்திராணி, ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜெ. காா்த்திக் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முன்னாள் தலைவா் எஸ்.பி. கண்ணன் நன்றி கூறினாா் .