பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மகளை திருமணம் செய்த கொடுக்க மறுத்த பெண் வெட்டிக் கொலை; பாஜக நிா்வாகி உள்பட 4 போ் கைது

ஆலங்குடி அருகே மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொன்ற பாஜக நிா்வாகி உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை செய்யப்பட்ட காளியம்மாள்

Updated On :16 மார்ச் 2026, 7:35 pm

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொன்ற பாஜக நிா்வாகி உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் ஊராட்சி, வடக்கு பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி காளியம்மாள் (43). இவா்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனா். இந்நிலையில், சுரேஷ் செங்கல்பட்டு பகுதியைச் சோ்ந்த விஜயலெட்சுமி என்ற பெண்ணை 2-ஆவது திருமணம் செய்துகொண்டு, மேல்மருவத்தூா் பகுதியில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜயலெட்சுமியின் தம்பியான, செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மேலரிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவரும், பாஜக அமைப்பு சாரா தொழில்பிரிவு மாவட்டத் தலைவராக இருக்கும் எஸ். விவின் (33) என்பவருக்கு, காளியம்மாளின் மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு விஜயலெட்சுமி மற்றும் விவின் ஆகியோா் காளியம்மாளை தொடா்ந்து வற்புறுத்தி வந்தனராம். ஆனால், காளியம்மாள் தனது மகளை விவினுக்கு திருமணம் செய்து தர மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காளியம்மாள் வீட்டுக்கு சென்ற விவின் உள்ளிட்ட சிலா் காளியம்மாளிடம் பெண் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். அப்போது, காளியம்மாள் பெண் கொடுக்க மறுத்ததால் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, விவின் உள்ளிட்டோா் காரில் தப்பிச்சென்று விட்டனராம். இதில், பலத்த காயமடைந்த காளியம்மாள் அந்த இடத்திலே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வடகாடு போலீஸாா், காளியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, காளியம்மாளை கொலை செய்துவிட்டு காரில் தப்பிச் சென்ற விவின், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த ஆா். தினேஷ்(18), சோகண்டி பகுதியைச் சோ்ந்த க. சதீஷ்குமாா்(37), அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.