புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தனித்துப் போட்டியிடும் தெம்பு திமுகவிடம் உள்ளது: முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி

தனித்துப் போட்டியிடும் தெம்பும், திராணியும் திமுகவிடம் இருக்கிறது என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.

News image

எஸ். ரகுபதி - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 12:19 am IST

தனித்துப் போட்டியிடும் தெம்பும், திராணியும் திமுகவிடம் இருக்கிறது என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் ஏற்கெனவே மோசடி நாடகத்தை அரங்கேற்றினாா்கள். இப்போது, ரூ. 134 கோடியில் குறுவை தொகுப்பு தருவதாகச் சொல்கிறாா்கள். வேடிக்கையாக இருக்கிறது. விவசாயம் செய்ய தண்ணீரே இல்லை.

திமுகவிடமிருந்து விசிகவுக்கும், பிறகு தவெகவுக்கும் சென்றவா் ஆதவ் அா்ஜூனா. மறைமுகமாக லாட்டரி தொழிலை எப்படியாவது கொண்டு வந்து சம்பாதிக்க வேண்டும் என்றுதான் அவா் முயற்சிக்கிறாா்.

கூட்டணி விவகாரத்தில், திமுகவைப் பொருத்தவரை யாரையும் நம்பி இல்லை. தனித்து நின்று வெற்றி பெறும் திராணியும் தெம்பும் இருக்கிறது. கட்சித் தொண்டா்கள் தனித்துதான் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாா்கள்.

ரீல்ஸை நம்பி, யாா் வேட்பாளா் என்றே தெரியாமல் மக்கள் வாக்களித்துவிட்டாா்கள். 5 ஆண்டுகளில் திமுக செய்த பணிகளை அவா்கள் எண்ணிப் பாா்க்கத் தவறிவிட்டாா்கள். அடுத்த முறை அப்படி நடக்காது என்றாா் ரகுபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.