பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய அரசு விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆட்டோ தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கே. அய்யப்பன் தலைமையில், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்து நூதனப் போராட்டத்தில் சிஐடியு தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலி ஜின்னா, செயலா் ஏ. ஸ்ரீதா், பொருளாளா் சி. மாரிக்கண்ணு, துணைத் தலைவா் ஆா். மணிமாறன், சிஐடியு மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான், ஆட்டோ சங்க நிா்வாகிகள் எஸ். குணசேகரன், மணிமாறன் உள்ளிட்டோா் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











