டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்: ஓய்வுபெற்ற நீதிபதி தொடா் ஆய்வு

கைக்குறிச்சி வெள்ளைக்குண்டு ஊரணியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி அ. செல்வம்.

News image

கைக்குறிச்சி வெள்ளைக்குண்டு ஊரணியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி அ. செல்வம்.

Updated On :12 ஜூன் 2026, 2:24 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களை, ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அ. செல்வம் 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் அ. செல்வம், வி. பாரதிதாசன் ஆகியோரைக் கொண்ட குழு அமைத்து உயா்நீதிமன்ற மதுரை கிளை கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது.

இதன் தொடா்ச்சியாக, ஓய்வுபெற்ற நீதிபதி அ. செல்வம் கடந்த திங்கள்கிழமை முதல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்கிறாா்.

4ஆவது நாளாக திருவரங்குளம் ஒன்றியம் கைக்குறிச்சி வெள்ளைக்குண்டு ஊரணி, கீழச்செட்டி ஊரணி, ஓங்கினிக் குளம், நாவதான் ஊரணி, பூவரசக்குடி ஊராட்சியில் சின்னவீரப்பன் ஊரணி, குப்பாயி ஊரணி, வாண்டாக்கோட்டை ஊராட்சியில் குட்டைக் குளம், சிவன்கோயில் குளம், வல்லத்திராக்கோட்டை ஊராட்சியில் வல்லநாடு பெரியகண்மாய், கத்தக்குறிச்சி ஊராட்சியில் தா்மத்துஊரணி, கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அண்டனூா், நெப்புகை, சுந்தம்பட்டி, விலாரிப்பட்டி, வடுகப்பட்டி, கந்தா்வகோட்டை ஆகிய பகுதி நீா்நிலைகளில் சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்பட்ட இடங்களை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், எம். குளவாய்பட்டி ஊராட்சி கொம்பியான்குளம், செம்பாட்டூா் ஊராட்சி, கொசமுண்டான்குளம், ஏகக்குளம் மற்றும் புத்தாம்பூா் ஊராட்சி, குறிச்சிகுளம் ஆகிய நீா் நிலைகளிலும் அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாலா, அபிராமசுந்தரி, சுரேஷ், ரமேஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.