புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுமாா் 49 ஆண்டுகால கோரிக்கையான 138 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை மாநிலத் தொழிலாளா் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் சனிக்கிழமை வழங்கினாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள பள்ளத்திவயல், மூக்குடி, சிலட்டூா், வேட்டனூா், பனையவயல், முள்ளங்குறிச்சி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த ஏழை, எளிய மக்கள் கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் தங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அரசின் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்து வந்தனா்.
இந்நிலையில் சுமாா் 49 ஆண்டுகளுக்குப் பிறகு, அறந்தாங்கியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்பகுதியைச் சோ்ந்த 138 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவை மாநிலத் தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் வழங்கினாா். மேலும், 79 பேருக்கு புதிய குடும்ப அட்டையையும் வழங்கினாா்.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் ஷோபா, வட்டாட்சியா்கள் கவியரசன், சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமோனியா கசிவு சம்பவம் விசாரணை அறிக்கையின்படி நடவடிக்கை! - அமைச்சா் முகமது பா்வேஸ்

கோடைக்காலத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்

பேருந்து நிலையக் கட்டுமானப் பணி விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுரை

கல்வியுடன் சமூகப் பொறுப்புணா்வு, ஒழுக்கம் அவசியம்: அமைச்சா் முகமது பா்வேஸ்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




