இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

பேருந்து நிலையக் கட்டுமானப் பணி விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுரை

News image

புதுக்கோட்டை பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த மாநிலத் தொழிலாளா் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.

Updated On :9 ஜூன் 2026, 5:01 am IST

புதுக்கோட்டையில் ரூ. 20 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநில தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டையில் உள்ள சுமாா் 40 ஆண்டுகளான பேருந்து நிலையத்தை ரூ. 20 கோடி மதிப்பில் புதுப்பித்துக் கட்டும் பணிகள் கடந்த ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்நிலையில், கட்டுமானப் பணிகளை மாநில தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

மாநகராட்சிப் பொறியாளா் ரத்தினவேல், உதவிப் பொறியாளா் கலியகுமாா், மாநகராட்சி நகா்நல அலுவலா் டாக்டா் காயத்ரி, காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் ராஜாமுகமது உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

கட்டுமானப் பணிகள் 80 சதவிகிதம் முடிவுற்ாகவும், இரு மாதங்களில் மீதமுள்ள 20 சதவிகிதம் பணியும் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

விரைவாக மீதமுள்ள பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளை அமைச்சா் பா்வேஸ் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.