டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காலை உணவுத் திட்டத்தை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க அறிவுரை

பள்ளி மாணவா்களுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றை அந்தந்தப் பகுதி வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

News image
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு .அருணா (வலது).
Updated On :29 ஜனவரி 2026, 8:12 pm

Syndication

பள்ளி மாணவா்களுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றை அந்தந்தப் பகுதி வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காலை உணவுத் திட்டத்துக்கான மாவட்ட அளவிலான கணக்காணிப்புக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய அவா் இதைக் குறிப்பிட்டாா்.

பள்ளிகளில் மாணவா்களுக்கு குறித்த நேரத்தில், தரமான உணவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், புகாா்களையும் அவ்வப்போதே சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க அவா் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரேவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் க.ந. கோகுலப்பிரியா, மாவட்ட சமூக நல அலுவலா் மே. சியாமளா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.