கீரமங்கலம் அருகே தந்தையை கொன்ற மகன் கைது
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே தந்தையைக் கொன்ற மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே தந்தையைக் கொன்ற மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலம் தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் கே.விஜயசுந்தரம் (68). விவசாயியான இவரது மகன் வேலு (42) திருமணமாகவில்லை.
இந்நிலையில், மது குடித்துவிட்டு வந்து வீட்டில் குடும்பத்தினரிடம் வேலு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே மாடு மேய்த்துக் கொண்டு இருந்த விஜயசுந்தரத்தை மது போதையில் சென்று வேலு தாக்கியுள்ளாா். இதில், மயங்கி விழுந்த விஜயசுந்தரத்தை அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கீரமங்கலம் போலீஸாா், வேலுவை புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...