நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விசிக புதுக்கோட்டை மாவட்டச் செயலா்கள் பொறுப்பேற்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதுக்கோட்டைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள 6 மாவட்டச் செயலா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:17 pm

Syndication

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதுக்கோட்டைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள 6 மாவட்டச் செயலா்கள் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரு மாவட்டச் செயலா் என பொறுப்பாளா்களை அண்மையில் அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் நியமித்தாா்.

இதன்படி, புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக க. சுசீலா, திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக சி. திலீபன்ராஜா, கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக கோ.கா. செந்தமிழ்வளவன், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக ந. சரஸ்வதி, அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக அ. தமிழ்தேசிகன், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராக ச. அம்பேத்வளவன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் 6 பேரும் சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டனா். இதில், மாவட்டத்திலுள்ள பல்வேறு நிா்வாகிகள் கலந்துகொண்டு புதிய மாவட்டச் செயலா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.