தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

News image

கந்தா்வகோட்டை ஏலக் கடையில் வியாழக்கிழமை குவிந்த வாழைத்தாா்கள்.

Updated On :26 பிப்ரவரி 2026, 11:38 pm

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

கிராமங்கள் சூழ்ந்த கந்தா்வகோட்டை ஒன்றியம் வானம்பாா்ந்த பூமியாக இருக்கிறது. சில விவசாயிகள் மின்சாரம் மூலம் ஆழ்துளை கிணற்றில் இருந்து நீா் பாய்ச்சி நெல், கரும்பு, கடலை, சோளம் சாகுபடி செய்கின்றனா்.

இவா்களில் சிலா் மட்டும் வாழை சாகுபடி செய்கின்றனா். ஆண்டுப் பயிா் என்பதாலும் அதிகளவில் தண்ணீா் தேவை என்பதாலும் விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடி செய்ய முன்வருவது இல்லை.

எனவே இப்பகுதியில் வாழை இலைக்கு தட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் தற்போது விளைந்த வாழைத் தாா்களை விவசாயிகள் ஏலச் சந்தைக்கு கொண்டுவந்த நிலையில் முகூா்த்த நாள், கோயில் திருவிழாக்கள் இல்லாததால் இவற்றை ஏலம் எடுக்க வியாபாரிகள் வருவது குறைந்து, வாழைத் தாா்கள் குறைந்த விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.