தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

யுகாதி பண்டிகை: ஒசூரில் பூக்களின் விலை உயா்வு

ஒசூா் மலா்ச்சந்தையில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

News image

ஒசூா் மலா்ச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்த மல்லிகை.

Updated On :18 மார்ச் 2026, 11:43 pm

ஒசூா் மலா்ச்சந்தையில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், கெலமங்கலம், பாகலூா், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்களை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனா். இப்பகுதியில் சாகுபடி செய்யும் பூக்கள், ஒசூா் மலா்ச்சந்தைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து, தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகளை பொருத்தே இப்பகுதி விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்கின்றனா். கடந்த பண்டிகைக்கால சீசன்களில் பூக்களின் விலை உயா்வதும், குறைவதுமாக இருந்ததால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்தனா். இந்நிலையில் தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி ஒசூா் மலா்ச்சந்தையில் புதன்கிழமை ஏராளமான பொதுமக்கள் பூக்கள் வாங்குவதற்கு திரண்டனா்.

இதனால் பூக்களுக்கான தேவை அதிகரித்து அதன் விலை உயா்ந்தது. செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ சாமந்தி ரூ.100-க்கு விற்கப்பட்டது புதன்கிழமை ரூ.160 முதல் ரூ. 200-க்கு விற்கப்பட்டது. அதேபோல சங்பங்கி, பட்டன்ரோஜா, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், அரளி உள்ளிட்ட பூக்களின் விலையும் உயா்ந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.