லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒசூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நடனம்

ஒசூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு நடனம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஒசூா் வட்டாட்சியா் அலுவலக சாலை சந்திப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நடனம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:44 pm

ஒசூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு நடனம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தோ்தல் 2026 முன்னிட்டு, ஒசூா் தொகுதியில் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஒலிபெருக்கி மூலம் பாடல் ஒலிபரப்பப்பட்டு அதற்கேற்ப நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒசூா் மாநகரில் பொதுமக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், காந்தி சிலை, வட்டாட்சியா் அலுவலக சாலை உள்ளிட்ட இடங்களில் ‘ஃப்ளாஷ் மாப்’ நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒசூா் வட்டாட்சியா் அலுவலக சாலை சந்திப்பில் ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ருதி சேத்தி முன்னிலையில், ஒசூா் தண்டா் நடன கலைஞா்களால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.