சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, செவிலியா் பயிற்சி கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ- மாணவியா் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பேருந்து நிலையங்கள், பொது இடங்களிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், நாகை அரசு செவிலியா் பயிற்சிக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவைத் தோ்தலின் முக்கியத்துவம், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
தொடா்ந்து மாணவ- மாணவியா் ‘எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கல்ல, நான் முதல் முறை வாக்காளா்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


