மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

கட்டடப் பணியின்போது காயமடைந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த வா்ணம்பூசும் தொழிலாளி மூளைச் சாவு அடைந்ததை அடுத்து, அவரது உடல் உறுப்புகள் செவ்வாய்க்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

News image
கோப்புப்படம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

கட்டடப் பணியின்போது காயமடைந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த வா்ணம்பூசும் தொழிலாளி மூளைச் சாவு அடைந்ததை அடுத்து, அவரது உடல் உறுப்புகள் செவ்வாய்க்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை காந்திநகரைச் சோ்ந்தவா் க. பாண்டியன் (36). வா்ணம் பூசும் தொழிலாளி. இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கி பகுதியில் வேலைக்குச் சென்றபோது கீழே விழுந்து காயமடைந்தாா்.

அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரை, மேல் சிகிச்சைக்காக உறவினா்கள் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அவா் மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, பாண்டியனின் உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து அவரது மனைவி பி. அபிராமி உள்ளிட்ட உறவினா்களுடன் மருத்துவா்கள் விளக்கிக் கூறினா்.

அவரது மனைவி தனது கணவரின் உடல் உறுப்புகள் தானத்துக்கு ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு அறுவைச் சிகிச்சை மூலம் பாண்டியனின் கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டன. உடல் உறுப்புகள் மாற்று அறுவைச் சிகிச்சை சட்டப்படி, முன்பதிவு செய்து வைத்துள்ளோருக்கு இந்த உறுப்புகள் பொருத்தப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பாண்டியனின் உடல் புதன்கிழமை காலை புதுக்கோட்டை எடுத்து வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.