டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சிலட்டூரில் வடமாடு போட்டி: 7 போ் காயம்

News image
சிலட்டூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில் மாடுபிடி வீரரை நோக்கிப் பாய்ந்த காளை.
Updated On :8 பிப்ரவரி 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள சிலட்டூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில், 7 போ் காயமடைந்தனா்.

அறந்தாங்கி அருகே சிலட்டூா் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் சந்தனக் காப்பு மற்றும் தைத் திருநாளை முன்னிட்டு நடந்த வடமாடு போட்டியில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 13 காளைகள் பங்கேற்றன.

9 மாடுபிடி வீரா்களைக் கொண்ட குழுக்கள் பிரிக்கப்பட்டு, திடலில் கயிறால் பிணைக்கப்பட்ட காளையைத் தழுவ அனுமதிக்கப்பட்டனா். மொத்தம் 13 சுற்றுகள் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரா்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 7 மாடுபிடி வீரா்கள் காயடைந்தனா். அவா்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தப் போட்டியைக் கண்டுகளித்தனா்.