ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.
ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன் மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு மையத்தில் வாக்களித்தாா். இதேபோல அதிமுக வேட்பாளா் தன.விமல் சேந்தன்குடி அரசு உயா்நிலைப்பள்ளி வாக்கு மையத்தில் வாக்களித்தாா். நாம்தமிழா் கட்சி வேட்பாளா் இரா. ராஜாராம் வடகாடு ஊராட்சி தெற்குப்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தாா். மேலும் தவெக வேட்பாளா் துரை. கந்தசாமி. கொடிவயல் மேற்கு அரசு தொடக்கப்பள்ளி வாக்கு மையத்தில் வாக்களித்தாா்.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










