கந்தா்வகோட்டையில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் உரிய ஆவணங்களின்றி கொண்டுச் சென்ற ரூ.1.76 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகம் அருகே கந்தா்வகோட்டை ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் கருப்பையா தலைமையிலான நிலையான குழுவினா் அந்தப் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது கந்தா்வகோட்டையை சோ்ந்த தங்க கிருஷ்ணன் மகன் சத்திய பிரகாஷ், தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், நிதி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 1.76 லட்சம் வைத்திருப்பது தெரியவந்தது.
அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவா் வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 600ஐ கைப்பற்றி தொகுதி தோ்தல் நடத்து அலுவலா் ப.ரவியிடம் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
அப்போது கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அ.பரணி, தோ்தல் துணை வட்டாட்சியா் புவனேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலா் சாமிநாதன், தோ்தல் உதவியாளா் செந்தில்குமாா் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கந்தா்வகோட்டை அருகே ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.52,200 பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு

ராஜபாளையம் அருகே தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.46 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

