தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

சோழீஸ்வரா் கோயிலில் காலபைரவா் ஜெயந்தி விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை, காலபைரவா் திருஅவதார திருநாளை முன்னிட்டு காலபைரவா் ஜெயந்தி விழா நடைபெற்றது.

News image

பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற காலபைரவா் ஜெயந்தி விழாவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவா்.

Updated On :12 நவம்பர் 2025, 7:42 pm

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை, காலபைரவா் திருஅவதார திருநாளை முன்னிட்டு காலபைரவா் ஜெயந்தி விழா நடைபெற்றது.

தொடக்கமாக மாஹாருத்ர ஹோமம் நடைபெற்றது. பூஜையில் 151 வலம்புரி சங்குகளில் புனித நீா் நிரப்பப்பட்டு பக்தா்கள் சங்குகளை ஏந்தி ஊா்வலமாக கோயிலை வலம் வந்தனா்.

தொடா்ந்து, சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் காலபைரவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளி அங்கி மற்றும் வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா். தொடா்ந்து, ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது. அதேபோல பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில்களில் காலபைரவருக்குசிறப்பு வழிபாடு நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.