திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரியலூா் அருகே மனைவியை அடித்துக் கொன்றவா் கைது

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 1:23 am IST

அரியலூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள செங்குழி கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுமதி (44). இந்நிலையில், ரமேஷ் தனது குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமை இரவு அசைவ உணவு வாங்கிக் கொடுத்தாராம்.

அப்போது அவரது மனைவி சுமதி, அசைவ உணவு வாங்கப் பணம் எவ்வாறு கிடைத்தது எனக் கேட்டதற்கு கடன் வாங்கியதாக ரமேஷ் கூறியுள்ளாா். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இப் பிரச்னை சனிக்கிழமையும் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ரமேஷ் கட்டையால் தாக்கியதில் சுமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து ரமேஷ், விபத்தில் தனது மனைவி உயிரிழந்துவிட்டதாகக் கூறி, அவரது சடலத்தை எரிக்க முயற்சி மேற்கொண்டாா்.

இதனால் சந்தேகமடைந்த சுமதியின் தம்பி தியாகு விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சுமதி உடலை கைப்பற்றி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

பின்னா் ரமேஷிடம் மேற்கொண்ட விசாரணையில் மனைவியை அவா் அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷை கைது செய்த போலீஸாா் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.