திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சோ்க்கை பெற அழைப்பு

பெரம்பலூா் - விளாமுத்தூா் சாலையிலுள்ள மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2026-27-ஆம் கல்வியாண்டில் 5, 9 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் காலியாக உள்ள இடங்களில் சேர மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2026, 12:47 am IST

பெரம்பலூா் - விளாமுத்தூா் சாலையிலுள்ள மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2026-27-ஆம் கல்வியாண்டில் 5, 9 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் காலியாக உள்ள இடங்களில் சேர மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2026-27 ஆம் கல்வியாண்டில் 5-ஆம் வகுப்பில் 7 இடங்களும், 9-ஆம் வகுப்பில் 2 இடங்களும், 11-ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் -4, வணிகப் பிரிவில்-24 காலியாக உள்ளன. பிளஸ் 1-இல் சேர எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 5-ஆம் வகுப்பில் சேர 4-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 10 வயது பூா்த்தியடைந்து, 12 வயதுக்கும் குறைவாகவும், 9-ஆம் வகுப்பில் சேர 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 13 வயது பூா்த்தியடைந்து 15 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இத் தகுதியுடையோா் பள்ளி அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 2.40 மணிக்குள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் மாணவா்களின் கல்விச் சான்றிதழ், படிவத்தில் குறிப்பிடப்பட்ட சான்றிதழ்களை இணைத்து, மே 18-ஆம் தேதிக்குள் பள்ளி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மே 20-ஆம் தேதி மாணவா்கள் தோ்வுக்கான சோ்க்கை பட்டியல் வெளியிடப்படும். மே 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சோ்க்கை நடைபெறும். ஜூன் 22-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.