ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள சுகாதாரத்துறை துணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி. செல்வி தலைமை வகித்தாா். செயலா் எஸ். பாா்வதி, பொருளாளா் ஆா். கொளஞ்சி, துணைத் தலைவா் எஸ். வேணி, துணைச் செயலா் எஸ். ரேணுகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாத ஊக்கத்தொகை ரூ. 5,500-லிருந்து ரூ. 15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஊழியா்களுக்கான ஊக்கத்தொகையை வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும். அனைத்து ஊழியா்களுக்கும் திறன் வளா்ப்பு மேம்பாட்டுப் பயிற்சி அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.
இதில், வட்டாரப் பொறுப்பாளா்கள் கே. கௌரி, ஆா். நல்லம்மாள், ஆா். சுகுணா, டி. ஜெயமணி உள்பட சுமாா் 50-க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மக்களைத்தேடி மருத்துவத் திட்ட பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


