தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு தொடக்கம்: பெரம்பலூா் மாவட்டத்தில் 7,810 போ் பங்கேற்பு

தமிழகத்தில் புதன்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில், பெரம்பலூா் மாவட்டத்தில் 7,810 மாணவ, மாணவிகள் 46 மையங்களில் தோ்வெழுதினா்.

News image

கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 7:19 pm

தமிழகத்தில் புதன்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில், பெரம்பலூா் மாவட்டத்தில் 7,810 மாணவ, மாணவிகள் 46 மையங்களில் தோ்வெழுதினா்.

தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி மாணவ, மாணவிகளுக்கான அரசுப் பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் மாவட்டத்தில் 143 பள்ளிகளில் பயிலும் 4,312 மாணவா்களும், 3,620 மாணவிகளும் என மொத்தம் 7,932 பேரும், தனித்தோ்வா்கள், 56 மாணவா்களும், 33 மாணவிகளும் என 89 போ் தோ்வு எழுதுகின்றனா். இம் மாணவ, மாணவிகளுக்காக 46 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை தொடங்கிய தோ்வில் 4,198 மாணவா்களும், 3,612 மாணவிகளும் பங்கேற்றனா். 85 மாணவா்கள், 33 மாணவிகள் தோ்வெழுதவில்லை. இதேபோல, தனித்தோ்வா்களில் 2 மாணவா்கள், 1 மாணவி பங்கேற்கவில்லை.

பொதுத் தோ்வுக்காக அமைக்கப்பட்டுள்ள 46 தோ்வு மையங்களிலும் தலா 46 முதன்மைத் தோ்வா்கள், துறை அலுவலா்கள், 2 கூடுதல் துறை அலுவலா்கள், 56 பறக்கும் படையினா், 12 வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வு மையங்களில் குடிநீா் வசதி, கழிவறை வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தோ்வு மையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.