கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பெரம்பலூா் அருகே போலி மருத்துவா் மீது வழக்கு

பெரம்பலூா் அருகே மருந்தகத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவா் மீது, பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :14 ஜூன் 2026, 12:19 am IST

பெரம்பலூா் அருகே மருந்தகத்தில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவா் மீது, பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம், மேற்குதெருவைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் மகன் மணிகண்டன் (38). இவா், பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், பெருமாள் கோயில் தெருவில் மருந்தகம் நடத்திவருகிறாா்.

10-ஆம் வகுப்பு வரை படித்ததாக கூறப்படும் மணிகண்டன், தனது மருந்தகத்தில் அப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் மதியழகன், பெரம்பலூா் ஊரக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் மணிகண்டன் போலி மருத்துவா் என தெரியவந்தது. தொடா்ந்து, இணை இயக்குநா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, தலைமறைவாகியுள்ள மணிகண்டனை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.