டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பெரம்பலூரில் நாளை பொங்கல் கலை விழா

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் அருகே கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் கலை விழா வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (ஜன. 15, 16) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் அருகே கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் கலை விழா வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (ஜன. 15, 16) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் நோக்குடன், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் கலைவிழா கிராமிய வாழ்வியல், விவசாய மரபு, பாரம்பரிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்களை நினைவூட்டும் வகையில் நடத்தப்படும்.

மாவட்ட ஆட்சியரகம் செல்லும் சாலையிலுள்ள மைதானத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பரதம், நையாண்டி மேளம், கரகம், காவடி, தப்பாட்டம், மயிலாட்டம், புரவியாட்டம், தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.