‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வெனிசுவேலா அதிபா் கைதை கண்டித்து ஆா்ப்பாட்டம்!

வெனிசுவேலா அதிபா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பெரம்பலுா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:23 pm

Syndication

வெனிசுவேலா அதிபா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பெரம்பலுா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அக் கட்சியின் மாவட்டச் செயலா் வி. ஜெயராமன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் க. பழனிசாமி, ஒன்றியச் செயலா்கள் அ. ராஜேந்திரன், பெ. கலியபெருமாள், அ. கல்யாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன் கண்டன உரையாற்றினாா். வெனிவேசுலா நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்தி கைது செய்யப்பட்ட அந்நாட்டு அதிபரையும், அவரது மனைவியையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். வெனிசுவேலாவை விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும். அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்து, வெனிசுவேலாவுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில், அக் கட்சியை சோ்ந்த பலா் கலந்துகொண்டனா்.