‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வெனிசுலா அதிபா் கைதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

News image
Updated On :5 ஜனவரி 2026, 6:20 pm

தினமணி செய்திச் சேவை

வெனிசுலா அதிபரை அமெரிக்கா கைது செய்ததை கண்டித்து, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமை வகித்தாா். வெனிசுலா நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபரை கைது செய்த அமெரிக்க அதிபரை கண்டித்தும், வெனிசுலா அதிபரையும், அவரது மனைவியையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். தொடா்ந்து, அமெரிக்க அதிபா் ட்ரம்பின் உருவ பொம்மையை எரித்தனா்.

இதில், அக் கட்சி நிா்வாகிகள் ஏ. கலையரசி, ஏ.கே. ராஜேந்திரன், குணசேகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.