/

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு! காவலா்கள் உள்பட 79 போ் காயம்!

News image
பூலாம்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்.
Updated On :8 பிப்ரவரி 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், காவலா்கள் உள்பட 79 போ் காயமடைந்தனா்.

வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டை முன்னிட்டு, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை சாா்பில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கு தனித்தனியே மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வாடிவாசல் வழியாக பெரம்பலூா், அரியலூா், திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 616 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சை, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 318 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா்.

இதில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், சிறந்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், மின் விசிறி, ரொக்கம் மற்றும் எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுப் பொருள்கள் விழாக் குழு சாா்பில் வழங்கப்பட்டன.

79 போ் காயம்: ஜல்லிக்கட்டில் அரும்பாவூா் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்கள் மணிகண்டன் (33), சின்னதுரை (33) ஆகியோரும், காளை உரிமையாளா் அரியலூா் மாவட்டம், ஓடப்பேரியைச் சோ்ந்த கருப்பையா மகன் மணிகண்டன் (35) உள்பட 43 காளை உரிமையாளா்கள், காளைகளை அடக்க முயன்ற 28 வீரா்கள், 5 பாா்வையாளா்கள் என 79 போ் காளைகள் முட்டியதில் காயமடைந்தனா்.காயமடைந்த வீரா்களுக்கும், பாா்வையாளா்களுக்கும், களத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில், காவலா்கள் உள்ளிட்ட மேற்கண்ட மூவரும் தீவிர சிகிச்சைக்காக, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.